யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி மத்தி பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் சமூகச் செயற்பட்டாளருமான சிங்கபாகு சிவகுமார் (பொக்சிங் சிவகுமார்) என்பவர் கொழும்பு 2ஆம் மாடிக்கு விசாரணைக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விசாரணைப்பிரிவுப் பொலிஸார் அவரை இன்று சந்தித்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர்.
இதுகுறித்து சிவகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
தான் புலம்பெயர் தேசங்களிலிருந்து கிடைக்கும் பணத்தினைக் கொண்டு இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்துவருவதாகவும் அவ்வாறான உதவிகளுக்கான நிதி எவ்வாறு கிடைக்கப்பெறுகின்றது, யார் அனுப்புவது போன்ற கேள்விகள் தன்னிடம் கேட்கப்பட்ட தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,
எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு 01 இல் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் முதலாவது பொறுப்பதிகாரியைச் சந்திக்குமாறு தனக்கு கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சிவகுமார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் மீன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தவர் என்று தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை